காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 62
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
“என்ன இது இங்கதானே இருந்தது. அதுக்குள்ள தானே விக்டர் போனான்.!!!” என டிடானியா கேட்க,
“அட இங்க பாரு …!” என்று மீரா சொன்னதை கேட்டு ஜன்னல் வழியே பார்த்தால் என்கிடு விரலில் அந்த மோதிரத்தை போட்டு ஏதேதோ பொருட்களை வைத்து சில வார்த்தைகளை சொன்னான். அந்த இடம் முழுக்க மிகப்பிரகாசமாக மின்ன ஆரம்பித்தது. எல்லோரும் கண்கள் கூச அவற்றை மூடிக்கொண்டனர். உள்ளே லெப் ஹாலில் இருந்த வட்ட தரை மூடியை அகற்றி விட்டு அந்த வெளிச்சத்தில் விக்டர் உள்ளே நுழைந்தான். என்கிடு உடலை பார்க்கமுடியாத அளவு ஒளி வெள்ளம்.
“இங்க என்ன நடக்குது கில்கமேஷ்?”ராபர்ட் கேட்டான்.
“இன்னும் கொஞ்ச நிமிடத்தில் என்கிடு உயிர் பெற்றுவிடுவான்.” என்றான் கில்கமேஷும் வெகு ஆர்வத்தோடு
“எனக்கென்னவோ ஏதோ தப்பா நடக்கப்போவது போலவே இருக்கு கில்கமேஷ்.” என்றாள் ஜெனி.
அப்போது சிறைக்கம்பியை பிடித்த இன்னொரு கையை ஆர்தர் கண்டு லேசாக அலற.
“ஷ்…. நான் தான்…” என்ற விக்டர் தன் பாக்கெட்டில் இருந்த டிஜிட்டல் லாக்கை உடைக்கும் ஸ்கேனர் மூலம் சிறையை திறந்து விட்டு.
“விக்டர்… நீ எங்களை காப்பாற்ற வந்தாயா?”
“அதெல்லாம் பேச இப்போ நேரமில்லை… காய்ஸ் வாங்க… இங்க நிக்குறது ரொம்ப ஆபத்து…”
“என்ன சொல்ற நீ… கொஞ்ச நிமிடத்தில் என்கிடு உயிர்பெற்றதும் அவனே நம்மள காப்பத்திடுவான்.” என்றான் ஆர்தர்.
“ஐயோ… உங்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன். இப்போ அவனால் தான் நமக்கு ஆபத்தே!”என்றதும் கில்கமேஷ் உடனே விக்டர் சட்டை காலரை இழுத்து கோபமாக
“என்ன சொல்ற?”என்று கேட்டான் .ஏனையவர்களும் குழப்பத்தில் நிற்க
“ஐயோ… எல்லாம் அப்பறமா சொல்லுறேன் இங்க இருக்க வேணாம். வெளிச்சம் குறைவதற்குள் நாம தப்பிச்சிட முடியும் என்று விக்டர் சொல்ல வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது தெரிந்தது. வேறு எதையும் யோசிக்காது. ஜெனி கில்கமேஷ் கையை பிடித்து கொண்டு,
“வாங்க போயிடலாம்” என்று கூற எல்லோரும் அங்கிருந்து ஹாலுக்கு சென்றனர்.
மெல்ல மெல்ல வெளிச்சம் குறைந்தது. மித்ரத் அந்த மங்கிய வெளிச்சத்தில் அவர்களை கண்டுவிட்டான்.
“அவங்கள பிடிக்க, யாரையும் விடாதீங்க கொல்லுங்க.” என்றதும் மித்ரத் ஆட்களுடன் இவர்கள் மோத வேண்டி ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக என்கிடு உடல் உண்மையான முழு தோற்றத்திற்கு வந்து கொண்டிருந்தது. இவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக பார்த்த மீராவும் டிடானியாவும் அங்கிருந்து ஓடினார்கள். திடீரென அவனுக்கு அறிமுகம் இல்லாத விக்டர் அங்கு வந்தாலும். கில்கமேஷும் நண்பர்களும் சிறையில் இருந்து விடுபட்டதாலும் மித்ரத் கொஞ்சம் குழப்பத்தில் நின்றான். என்ன நடந்த போதும் என்கிடு உடல் அவர்களுக்கு கிடைக்க கூடாது என்பதற்காக ஆட்களை ஏவி விட்டு அவன் அங்கேயே நின்றான். ஒளி முற்றாக அணைந்து விட்டது. ரத்தமும் சதையுமாக என்கிடு கண்கள் மூடிய நிலையில் அங்கு இருந்தான். அதை பார்த்ததும் கில்கமேஷ் செயலற்று அவனையே பார்த்து கொண்டிருக்க அவனுக்கு ஒருவன் முகத்தில் குத்தினான். எதிர்பாராத நேரத்தில் விழுந்த அடி என்பதால் வாயிலில் இருந்து ரத்தம் கசிய கில்கமேஷை அடித்தவனுக்கு லேபில் இருந்த நீண்ட கம்பி ஒன்றால் ஜெனிபர் அடித்தாள். இப்படி அப்படியாக துப்பாக்கி சூடுகளும் இடம்பெற. அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து எம்மவர்கள் அதில் இருந்து தப்பித்து கொண்டனர்.
கில்கமேஷிற்கு மித்ரத்தை கொன்றுவிடவேண்டும் என்ற ஆத்திரம் அதிகரிக்க ஏதோ ஒரு பெரிய இரும்பு கம்பியால் அவனை தாக்க ஓங்கி அடிப்பதற்கிடையில் ஒரு கை குறுக்கே வந்து கம்பியை பிடிக்க… அந்த கையில் என்கிடு மோதிரம் அதிர்ச்சியோடு இந்த பக்கம் திரும்பினால் அவனே தான்… கில்கமேஷுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை… அவ்வளவு பூரிப்பு… எல்லோருமே அவரவர் செய்த சண்டைகளை நிறுத்தி விட்டு இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்… கம்பியை போட்டு விட்டு மகிழ்ச்சியோட என்கிடுவை கட்டிப்பிடிக்க திடீரென யாரும் எதிர்பாராத வகையில் என்கிடு கில்கமேஷை வயிற்றில் கைகளால் குத்தி கீழே விழவைத்தான்.
“ஏன்….”
“ஐயோ!”
“கில்கமேஷ்!”
மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
“என்ன இது இங்கதானே இருந்தது. அதுக்குள்ள தானே விக்டர் போனான்.!!!” என டிடானியா கேட்க, “அட இங்க பாரு …!” என்று மீரா சொன்னதை கேட்டு ஜன்னல் வழியே பார்த்தால் என்கிடு விரலில் அந்த…
“என்ன இது இங்கதானே இருந்தது. அதுக்குள்ள தானே விக்டர் போனான்.!!!” என டிடானியா கேட்க, “அட இங்க பாரு …!” என்று மீரா சொன்னதை கேட்டு ஜன்னல் வழியே பார்த்தால் என்கிடு விரலில் அந்த…