மீட்காப்பின் வழியினிலே……
- by admin
- 22
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
(ஓர் மனச்சத்தம்)
தனிமைக்கஞ்சி
தானாகவே உறவுகளை
ஏற்படுத்தி
தயங்காமல்
தாமதியாமல்
அவர்களுடன்
தினம் தினம் உறவாடி
அவர் துன்பங்களையும்
என் துன்பமென்றேற்று
என் துன்பமதைக்
களைந்து
ஓரளவுக்கு எனை
தினம் தினம் சரிசெய்து
எந்நாட்களை நன்நாளென
வடித்த காலம்
மலயேறிப்போய்
இன்று
உறவுகளுக்கஞ்சி
துரோகங்களுக்கஞ்சி
போலிகளுக்கஞ்சி
தனிமையை
விரும்பி ஏற்று
தலையணையைத்
துயர் துடைப்பானாக்கி
யாதையும் விட்டொதுங்கி
சிறிதொரு தனிமையில்
எனை நானே
தனிமை செய்து
எனை நானே
வாரியணைத்து
எனை நானே
சரி செய்து
எனை நானே
ஸ்பரிசித்து
நாட்கடத்துகிறேன்…
ஆஹா…
போலிகளுக்கு முன்னால்
இத்தனிமையின்
அழகுதான் என்னே…
மீட்காப்பின் வழியினிலே…
Sheefaibraheem
(Hudhaaiyyah)
Maruthamunai
SEUSL (FIA)
(ஓர் மனச்சத்தம்) தனிமைக்கஞ்சி தானாகவே உறவுகளை ஏற்படுத்தி தயங்காமல் தாமதியாமல் அவர்களுடன் தினம் தினம் உறவாடி அவர் துன்பங்களையும் என் துன்பமென்றேற்று என் துன்பமதைக் களைந்து ஓரளவுக்கு எனை தினம் தினம் சரிசெய்து எந்நாட்களை…
(ஓர் மனச்சத்தம்) தனிமைக்கஞ்சி தானாகவே உறவுகளை ஏற்படுத்தி தயங்காமல் தாமதியாமல் அவர்களுடன் தினம் தினம் உறவாடி அவர் துன்பங்களையும் என் துன்பமென்றேற்று என் துன்பமதைக் களைந்து ஓரளவுக்கு எனை தினம் தினம் சரிசெய்து எந்நாட்களை…