மௌனப்பண்பாடு
- by admin
- 28
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இது போலோ ப்ரைரே எனப்படும் ஒடுக்கு முறைக்கு எதிராக அறிவுபூர்வமாக கிளர்ந்தெழுந்து மக்களை விளிப்புணர்வுக்குற்படுத்தியவரின் பயன்தரு சிந்தனை.
சமூகத்தளத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்ற அழுத்தம் நிறைந்த நெருக்கடிகளுக்குள்ளால் வாழும் மனிதர்கள் அவலத்தையும் விழுங்கிக்கொண்டு அடங்கி அடக்கி வாசிக்கவேண்டும். பேசா மடந்தைகளாக வாய்மூடி மௌனம் காக்கவேண்டும். அதிகார வர்க்கம் விரும்புகின்ற மானசீக கெடுபிடி தான் இது.
ஒடுக்குமுறைக்கு ஆளாகும் சமூக குழுமத்தின் கேவலமான பரிமாணம் உச்ச நிலையில் எழுகின்ற அதீத பய உணர்வு மேலிடுவதும் தனிநபரையும் சமூகத்தையும் அப்படியே மௌனிக்க வைப்பதும் தான். அதிகார செல்வாக்குள்ள வர்க்கம் தந்த இடைவிடாத அழுத்தங்களால் ஏற்பட்ட உளநெருக்கீடுகள். crisis அத்தகையவர்களை மௌனிக்கவைத்துள்ளன. வாய்களுக்கு பூட்டு போடப்பட்ட அடிமைநிலையை அவர்கள் உணர்வர்.
மேலும் மேலும் அமுக்கமும் அழுத்தமும் நிறைந்த அவலமான வாழ்வை விடவும் மௌனமாக இருந்து உளச்சுகத்துடன் விடுதலை உணர்வுடன் வாழ்வதே ஒடுக்குமுறைக்கு உற்பட்ட பின் தற்காலிக விடுதலை பெறுவதற்கான சமயோசித வழியாகும் மௌனப்பபண்பாட்டை விடவும் பக்குவமான அழகாழம் அர்த்தம் மிகுந்த மோட்ச நிலையை இன்னும் கண்டுகொள்ளவில்லை
Bisthamy Ahamed
இது போலோ ப்ரைரே எனப்படும் ஒடுக்கு முறைக்கு எதிராக அறிவுபூர்வமாக கிளர்ந்தெழுந்து மக்களை விளிப்புணர்வுக்குற்படுத்தியவரின் பயன்தரு சிந்தனை. சமூகத்தளத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்ற அழுத்தம் நிறைந்த நெருக்கடிகளுக்குள்ளால் வாழும் மனிதர்கள் அவலத்தையும்…
இது போலோ ப்ரைரே எனப்படும் ஒடுக்கு முறைக்கு எதிராக அறிவுபூர்வமாக கிளர்ந்தெழுந்து மக்களை விளிப்புணர்வுக்குற்படுத்தியவரின் பயன்தரு சிந்தனை. சமூகத்தளத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்ற அழுத்தம் நிறைந்த நெருக்கடிகளுக்குள்ளால் வாழும் மனிதர்கள் அவலத்தையும்…