வீழ்வேன் என்று நினைத்தாயா
- by admin
- 17
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஆண் என்னும் கர்வம் கொண்டு
நீ என்னை அடக்கி ஆழ்ந்த போதும்
சிந்தும் கண்ணீர்த் துளிகளுடன்
என் வாழ்வை முடித்துக் கொள்வேன் என
நீ நினைத்தாயா?
என் உலகமே நீ தான் என வந்தவளை
வீதியோரம் வாட விட்டு நீ சென்றவுடன்
தலை விரி கோலமாக பைத்தியம் பேசிவேன் என்றும் எதிர்பார்த்தாயா?
உன்னை விட்டால் வேறு வழியில்லை என்று
நீ எட்டி உதைக்க, உதைக்க
உன் காலடியிலே வெட்கம் கெட்டு கிடப்பேன்
என கற்பனை செய்தாயா?
நிச்சயமாக நான் நீ எட்டி உதைத்ததும்
கண்ணீர் துளிகளுடன் விழுந்தேன் விந்தையாக
இன்று மீண்டெழுந்தேன் பெரு விருட்சமாக!
நீ இல்லாமல் நான் இல்லை என்று
உன்னை நம்பி நான் சொல்லியதால்!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயா?
Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies
South Eastern University of Sri Lanka
ஆண் என்னும் கர்வம் கொண்டு நீ என்னை அடக்கி ஆழ்ந்த போதும் சிந்தும் கண்ணீர்த் துளிகளுடன் என் வாழ்வை முடித்துக் கொள்வேன் என நீ நினைத்தாயா? என் உலகமே நீ தான் என வந்தவளை…
ஆண் என்னும் கர்வம் கொண்டு நீ என்னை அடக்கி ஆழ்ந்த போதும் சிந்தும் கண்ணீர்த் துளிகளுடன் என் வாழ்வை முடித்துக் கொள்வேன் என நீ நினைத்தாயா? என் உலகமே நீ தான் என வந்தவளை…