Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வளமான சமூதாயத்தைக் கட்டி எழுப்புவோம் 

வளமான சமூதாயத்தைக் கட்டி எழுப்புவோம்

  • 19

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கடந்த வாரம் இலங்கையின் சில  பகுதிகளில் இடம் பெற்ற கொலை, தற்கொலை என்பவை பண்பாட்டு வீழ்ச்சியை நமக்கு  படம்பிடித்துத் காட்டுகின்றன. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அந்தவகையில் ஒரு சிறந்த குடும்பம் சிறந்த சமூகத்தின் ஆணிவேர் எனலாம். குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல் பலவகையான குற்றச் செயல்களுக்கு
ஏதுவாகின்றது. கணவன் மனைவியரிடையே ஏற்படும் மனமுறிவு, மணமுறிவு வரை சென்று விடுவது பிள்ளைகளின் ஏதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும் என்பது மறுப்பதற்தில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு மீறப்படுதலே இன்றைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக காணப்படுகின்றது. தொடர்பாடல் ஊடகங்கருக்கு அடிமையாகிப் போய்விட்ட மனிதர்கள்  யாரை எந்த இடத்தில் வைக்கவண்டும் என்ற வரையறை இல்லாமல் சர்வசாதரணமாக ஆண், பெண் பாகுபாடின்றி தொடர்புகளில்   இணைத்திருப்பது பலமுறையற்ற உறவுகளுக்கு தூண்டுகோலாகின்றது.

எனவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவை ஆகும். குடும்பத்தில் தனது வகிபாகம் என்ன என்பதை  உணர்ந்து செயற்படல்
சீரிய சமுதாயமொன்றை வழிநடத்துவதன் முதற்படி என்பதை யாவரும் புரிந்து கொள்ளல் சாலச்  சிறந்ததாகும்.

ஆன்மீக ரீதியில் பலம் வாய்ந்த உள்ளம் காணப்படுவதன் மூலம் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும் அலைபாயும் மனதை இறை சிந்தனை மூலம் கடிவாளமிட்டுக் கொள்வோமானால் நிச்சயமாக ஒருபோதும் தீமைகளின் பக்கம் நெருங்காமல் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனவே, கலாச்சார சீரழிவுகளில் சிக்கிக் சின்னா பின்னமாகாமல் எமது குடும்பங்களை பாதுகாக்க  வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் மீதும்  காணப்படுகின்றது என்பதை உணர்ந்து  செயற்படுவோம். வளமான சமூதாயத்தைக் கட்டி எழுப்புவோம்.

மக்கொனையூராள்

கடந்த வாரம் இலங்கையின் சில  பகுதிகளில் இடம் பெற்ற கொலை, தற்கொலை என்பவை பண்பாட்டு வீழ்ச்சியை நமக்கு  படம்பிடித்துத் காட்டுகின்றன. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அந்தவகையில் ஒரு சிறந்த குடும்பம் சிறந்த சமூகத்தின்…

கடந்த வாரம் இலங்கையின் சில  பகுதிகளில் இடம் பெற்ற கொலை, தற்கொலை என்பவை பண்பாட்டு வீழ்ச்சியை நமக்கு  படம்பிடித்துத் காட்டுகின்றன. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அந்தவகையில் ஒரு சிறந்த குடும்பம் சிறந்த சமூகத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *