நித்யா… அத்தியாயம் -27

  • 19

”அவ….. ”

கைகளை இறுகப் பொத்திக் கொண்டான் அவன். பெருமூச்சுடன் கல் ஒன்றில் அமர்ந்தான். பவித்ராவின் கண்களும் கலங்கியிருந்தது.

”நா ஏ வாழ்க்கேலயே ஒங்கக்காவ போல ஒரு பொண்ண பாத்ததேயில்ல ஆனா…. ஆனா…. அந்த நாசகார கும்பல்….”

கைகளை கல்லில் அடித்துக் கொண்டான். சிலை போல நின்றுகொண்டிருந்த பவித்ராவின் தோள்களை பற்றி,

”ஒனக்கு ஒன்னு தெரியுமா? ”

பார்வையை அவன் கண்களுக்கு நேராக உயர்த்தியவள், மௌனமாகப் பேசிய வசனத்தை புரிந்து கொண்டவன் போல,

”அந்த கும்பல்ல ஒங்க மச்சானும் இருந்தான்….” ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றவள்,

”பொய்…..”

அவளைப் பற்றியிருந்த கைகளை உதறிவிட்டு கத்தினாள். மீண்டும் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு,

”நீ நம்ப மாட்டாய்னு தெரியும்… வா… போலாம்…”

அவளை இழுத்துக் கொண்டு காரினுள் சென்றவன் வேகமாக அதை ஓட்ட ஆரம்பித்தான். குழப்பத்தின் உச்சிக்கே சென்றவள்,

”பிளீஸ்…. எங்க போறோம்…. இப்ப….. ” அவளை அடக்குபவன் போல கையசைத்தவன்,

”கொஞ்சம் பொறுமையா வா….”

கார் வேகமாகச் சென்று ஓர் ஒற்றையடிப் பாதையினருகே நின்றது. பவித்ரா அவனது முகத்தை நோக்கினாள்.

******************************

காரை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்ற விக்னேஷ் சீற்றத்துடன் வீட்டினுள் நுழைந்தான். அங்கே கார்த்திக்கைக் கண்டவன்.

”டேய்…. நீ எங்க? ” கார்த்திக் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு,

”அண்ணா இருக்காராடா? ”

”இல்ல…. ஏ? ” சுற்று முற்றும் பார்த்தவன்,

”விக்கி…. வா ரூம்கு போய் பேசலாம்….” அவசரமாக அவனையும் இழுத்துக் கொண்டு நடந்தான்.

”டேய்…. என்னாச்சு…..” கதவுக்கு தாள்பாழ் போட்டவன்,

”டேய்… நாம சிக்க போறோம்…. ” ஏதும் புரியாமல் அவனை பார்த்தான் விக்னேஷ்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

”அவ….. ” கைகளை இறுகப் பொத்திக் கொண்டான் அவன். பெருமூச்சுடன் கல் ஒன்றில் அமர்ந்தான். பவித்ராவின் கண்களும் கலங்கியிருந்தது. ”நா ஏ வாழ்க்கேலயே ஒங்கக்காவ போல ஒரு பொண்ண பாத்ததேயில்ல ஆனா…. ஆனா…. அந்த…

”அவ….. ” கைகளை இறுகப் பொத்திக் கொண்டான் அவன். பெருமூச்சுடன் கல் ஒன்றில் அமர்ந்தான். பவித்ராவின் கண்களும் கலங்கியிருந்தது. ”நா ஏ வாழ்க்கேலயே ஒங்கக்காவ போல ஒரு பொண்ண பாத்ததேயில்ல ஆனா…. ஆனா…. அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *