என் ரெயில் பயணம்
- by admin
- 13
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மெதுவாக ஒருநாள் நடைபோட்டு
பேரூந்தை தவறவிட்டுத் தவிக்கையிலே
தள்ளி நின்று தாலாட்டியது
தண்டவாள மணியோசை
விரைந்து வந்தும் நிரல் தாண்டி
என் நிழல் கூட உள்வர முடியவில்லை
பொறுமை காத்து பெறுமையாக
பாதம் பதித்து ஜன்னலோரம் நானிருக்க
நட்ட நடு நிசிக் காற்றும்
காட்டு வழிப்பாதையும்
கண்களை நடுங்க வைத்தது
முதல் பயணமல்லவா முடிவில்லா
நெடும் பாதையாய் தோன்றியது
விரைவில் வீடு வந்து
சேர்ந்திடாதா என்ற ஏக்கத்தால்
தலையணை இல்லை என்ற போதும்
தலைவாரி விட காற்று முன்வந்தது
முதலாம் வகுப்பில்
முதுகு சுமந்த பொதியில்
மூன்று பெட்டியில்
நான் வரைந்த புகையிரதமோ இது
இல்லை அது விரல் தீண்டியதும் வீடுவரும்
இது விடியல் தாண்டியதும் வீடுவரும்
என்று என்னிய நிலையில்
சிறு உறக்கம் கொள்ள முயன்றும்
தடுத்து வைத்திருந்தது
என்னை அந்த தாலாட்டும் மணியோசை
இருளிலும் இயற்கை அழகுதான்
என்பதை உணரவே
அரைமயில் தூரம் வரை
அடர்ந்த காடாய் இருந்தது
இம்சையான பயணம் என்ற போதும்
இதமாகத்தான் இருந்தது
இந்த ரெயில் பயணம்
கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை-08
மெதுவாக ஒருநாள் நடைபோட்டு பேரூந்தை தவறவிட்டுத் தவிக்கையிலே தள்ளி நின்று தாலாட்டியது தண்டவாள மணியோசை விரைந்து வந்தும் நிரல் தாண்டி என் நிழல் கூட உள்வர முடியவில்லை பொறுமை காத்து பெறுமையாக பாதம் பதித்து…
மெதுவாக ஒருநாள் நடைபோட்டு பேரூந்தை தவறவிட்டுத் தவிக்கையிலே தள்ளி நின்று தாலாட்டியது தண்டவாள மணியோசை விரைந்து வந்தும் நிரல் தாண்டி என் நிழல் கூட உள்வர முடியவில்லை பொறுமை காத்து பெறுமையாக பாதம் பதித்து…