மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் மாமனிதர்

ஈழத்திருநாட்டின் உதய சூரியனாய் உமருலெப்பை கதீஜா தம்பதியினர் ஈன்றெடுத்த மாமுத்து தும்புளுவாவையூர் புனிதர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் ஹனீபா ஹஸ்ரத் உலமா தலைமுறையில் உத்தமராய் உதித்தவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் கலாம் கல்வி செல்வங்களை கல்பில் சுமந்த குடும்பமதில் கல்விமான் வாரிசாய் கண்ணியமாய் பிறந்தவர் கச்சிதமாய் கடமையிலும் கல்லூரியில் வென்றவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் இளமையிற் கல்வியதை அல் அஸ்ஹரில் பெற்று பயிற்றுனர் பயிற்சியால் பட்டமும் பெற்றவர் மறையை மனதிலேந்திய மங்காத ஆலிமவர் […]

Read More

ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக!

ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக (ஹசன் அய்யூப் ரஷாதிக்கு) சில வரிகள் உதிர்ந்த பூவிற்காக கவி எழுதுவது கடமையல்ல, கவியாக அல்ல உள்ளத்தின் கண்ணீர் வரிகளாக மறைந்தும் மறவா மாமனிதராய் மனித மனங்களில் நீர் வாழ வேண்டும் என்பதற்காய் கடைசித் தங்கையாய் என் அகவரிகள் உமக்கு சமர்ப்பணம் ஜமாதுல் அவ்வல் பௌர்ணமி அன்று பௌர்ணமியாய் மிளிர்ந்தது உம் பூமுகம் அந்த நாள் அன்றைய நாள் இருண்ட நாள் எம்மை கடந்து சென்ற அந்நாளில் ஏற்றுக்கொள்ள முடியாத அச்செய்தி கேட்டு […]

Read More

சீதாராமம்

யார் சொன்னது சீதாவும் ராமனும் இணைவதற்கு பிறவியெடுக்காதவர்கள் என்று?? எத்தனையோ சீதாக்கள் ராமனுடனும், எத்தனையோ ராமன்கள் சீதாவுடனும், உயிரோடு உயிராக உள்ளத்தால்! உண்மையாய்! உத்தமமாய்! உயிர்கொடுத்து காதலித்து இணைந்தே வாழ்ந்திட பிறவியெடுத்தார்கள்! பிறவியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! இன்னும் பிறவியெடுப்பார்கள்! ஆனால் காலம் தான் ஏதோ ஒரு வகைக் கோலத்தினால் சதி செய்து! விதியை மாற்றி! ராமன்களை உயிர் துறக்கவைத்து சீதாக்களை விதவைகளாக்குகின்றன! இன்னும் ராமன்களை தபுதாரன்களாக்குகின்றன! அதனையே இந்த சீதாராமும், பறைசாற்றுது உலகுக்கு! “மாதம் 600 ரூபாய் சம்பளம் […]

Read More

ஏழைச் சிறுவனின் ஏக்கம்

பாடசாலை சென்றதில்லையடா பாடப் புத்தகமும் படித்தில்லையடா பையை சுமந்ததில்லையடா நண்பனொடு கைகோர்த்து போகனதில்லையடா! சீருடையும் அணிந்ததில்லையடா வீட்டுப்பாடம் செய்ததில்லையடா விரல் வலிக்க எழுதவில்லையடா! கண் விழித்து படிக்கவில்லையடா பரீட்சையும் எழுதவில்லையடா இதைக் கேட்க யாரும் இல்லையடா! ஏழையாய்ப் பிறந்துவிட்டால் கல்வியும் எட்டாகனியா ஏற்றம்வாழ்வில் வாராதோ ஏக்கமுடன் கேட்கின்றேன் நானும்! பதில் வேண்டுமடா என் கேள்விகளுக்கு! பாடசாலைப் போகவேண்டும் பாடமும் படிக்க வேண்டும் நண்பர்கள் விளையாட வேண்டும் வீடு சென்று பாடங்களை மீட்ட வேண்டும் அன்றாடப் பாடங்களை தாயிடம் […]

Read More

பயணம்

உலகில் உள்ள ஒவ்வொன்றும் உள்ளத்தில் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு உலாவித் திரிவதே உலகின் விதிமுறை! பயணிகள் பயணிக்கும் பயணங்கள் ஒவ்வொன்றும் பாதை முடிந்த பிறகும் பல கதைகள் சொல்லுமா? இல்லை பாதி வழியிலே பரிதவிக்க விடுமா? என்பது பயணியின் சிந்தனையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை! வாழும் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு பயணம்! எதற்காகவோ ஒரு பயணம்! எதைத்தேடியோ ஒரு பயணம்!! பிறப்பு முதல் இறப்பு வரை பயணம்! பயணம் என்பது பலர் மனம் வென்று […]

Read More

The Real Super Hero

உள்ளுக்குள் ஆயிரம் காயங்களை மறைத்து தன் பிள்ளையின் சந்தோசம் நிலைக்க வெளியில் பொய்யாய் சிரிக்கும் ஓருயிர்… சிந்தும் வியர்வையை ஒரு பொருட்டாக நினையாது பிள்ளையின் வாழ்வு சிறக்கத் துடிக்கும் உயிரது.. சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைத்து பிள்ளைகளின் ஆசைகளை தலையில் சுமந்து அதனை நிறைவேற்றத் துடிக்கும் அவரின் நெஞ்சம், அவரின் உழைக்கும் கரங்கள் நாம் இலட்சியம் காண உதவும் விதங்கள் எத்தனையோ… தந்தை என்பது வெறும் வார்த்தையல்ல அது உயிருடன் உலாவும் போது நம் பார்வைகள் பெரிதாக […]

Read More

பாதையோரமாய்

அம்மா சிறுவயதில் போலின்கள் இருந்தாக புராணக்கதை போல் சொல்லியிருக்கிறார் சிறுமியாய் நான் இருக்கையிலே இன்றைய அவலம் மீண்டும் அதே சித்திரம் சுவரோவியமாய் வரையப்படுகின்றது வலிகளை அள்ளிக்கொடுக்கின்றது வஞ்சகமில்லாமலே போனவர் சீக்கிரம் வரவேண்டுமென போfனடித்து பார்த்தே பாதி நேரம் போகிறது வீட்டிலே படபடக்கும் நெஞ்சுடன் பாதையோரமாயே எங்கள் பாதி எதிர்காலம் சீரழிகிறது எதிர்த்து நிற்க வழியெதுவென எண்ணியே தலையில் உள்ள முடி எச்சிலாய் குப்பையாய் குப்பைத்தொட்டிக்கு சென்றுகொண்டிருக்கிறது. BINTH AMEEN BA (SEUSL) SLTS

Read More

நோன்பின் மாண்பு

ரமழான் என் தேசம் வந்து சென்றது ரய்யான் சுவனவாசலின் முகவரி தந்து சென்றது நோன்பிருந்து பக்குவமாய்க் கழித்தோம் முப்பது நாட்கள் மாண்பறிந்து இறைவன் கூலி தருவான் – ஆஹா அது நம் வாழ்வின் அற்புத நாட்கள். பட்டினி இருப்பதிலும் கிடைத்திடுமே மனமகிழ்ச்சி – இது படைத்தோனின் திருப்தி தேடும் ஓர் அற்புத நிகழ்ச்சி. ஆறுவயதுப் பாலகரும் நோன்பிருக்கும் காட்சி பேருவகைப் பெருவெள்ளம் அல்லாஹ் அவனின் மாட்சி அதிகாலைப் பொழுதெழுந்து ஸஹர் செய்யும் நேரம் தஹஜ்ஜுத்தில் குறைத்ததிடுமே நம் […]

Read More

தாய் வீடு

தட்டு தடுமாறி நடந்து தவழ்ந்து விழுந்து எழுந்த பயிற்சியறை என் தாய் வீடு உல்லாசமாய் சுற்றி திரிந்து விரும்பியதை எல்லாம் விரும்பிய நேரம் உண்ணும் உணவகம் என் தாய் வீடு சுதந்திரமாக நடமாடி வேண்டியதை எல்லாம் கேட்டு உரிமையுடன் உத்தரவிடும் ஆட்சிபீடம் என் தாய் வீடு செல்லச் சண்டைகளோடும் வம்பு சண்டைகளோடும் சகோதரங்களோடு கூடி கும்மாளமடிக்கும் மைதானம் என் தாய் வீடு போட்டியின்றி பொறாமையின்றி சீண்டலும் சிரிப்பும் அன்பும் அக்கறையும் நிறைந்த பூஞ்சோலை என் தாய் வீடு […]

Read More

தாய் நாடு தத்தளிக்கின்றது

வளம் நிறைந்த தாய் நாடே வங்க கடலில் இலக்கின்றி சிக்கிய கப்பலாய் தத்தளிக்கின்றாய் -இன்று இன அரசியலில் ஈர்க்கப்பட்டு சிந்திக்காமல் செய்த செயலால் உன் தலையேழுத்தே மாறிவிட்டது தாய் நாடே விண் முட்டும் விலை வாசி விக்கித்து நிற்கும் பொதுமக்கள் பசி மறந்து தூக்கம் தொலைத்து கால் கடுக்க இரவு பகல் பாராமல் வீதி எங்கும் நீண்டு செல்கிறது பெற்றோல் டீசலுக்கான மக்கள் வரிசை வயது வித்தியாசம் இன்றி இன மத பேதமின்றி சொந்த வேலைகளையும் சுக […]

Read More

பெண் பார்க்கும் படலம்

சொப்பனமாய் செதுக்கி மஞ்சம் பூசி கோட்டழகுடன் கண்வெட்டும் அழகோவியமாய் வலம் வந்த நங்கை ஆசைக்கனவுகளை தன்னுள்ளே முடிச்சிட்டு கூடிநின்றோர் வாழ்த்தும் களிப்புடன் முகிழ்த்தெழுந்த வந்தனங்களுடன் வேட்கையில் பல சொந்தங்கள் சூழ களைந்த தேனீக்களாய் சிதறும் எண்ணங்கள் தாங்கியும் பவ்வியமாய் புன்முகங்காட்டும் பெற்றவர்கள் கொஞ்சும் மொழி பேசி தன் உறவாய் உரிமை எடுத்தவர்களுடன் – அவள் மனக்கிடங்கில் மாளிகையின் கதவுகள் தானாகத்திறந்து கொள்ளும் கங்காணிகள் போல் தொடுக்கும் கணைகளை மனதில் வாங்கியவள் வெறும் சதைப்பிண்டமாய் கண்டவர்கள் தன்னில் இருந்து […]

Read More

எண்ணெய் இன்றி

வீட்டுக்கு போ என ஊர்மக்கள் கூச்சலிட்டால் வீடு செல்ல முடியுமா எண்ணெய் இன்றி மனைவியோ வீட்டுக்கு வர வேண்டாம் என்கிறாள் எண்ணெய் இன்றி மகனோ அமெரிக்காவில் நான் வரிசையில் எண்ணெய் இன்றி எண்ணெய் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவாதென தனியாக வந்தேன் தவிக்கையில் எண்ணெய் இன்றி Ibnuasad

Read More

நீர்

இயற்கை எனும் பச்சை கம்பளத்தில் மூன்றில் இரண்டாய் தனக்கென்று இடம்பதித்து உய்யாரமாய் ஊடுறுவி தாவரங்கள் தழைத்து தாகம் தீர்க்க உயிர்கள் நிலைத்திருக்க விண்ணவனின் அருள் விந்தையாய் வந்துதிக்க வீணடிக்காதீர் நீரை வீழ்வீர் நீரே! அஸ்மா மஸாஹிம் பாணந்துறை

Read More

பசியும் பட்டினியும்

வேலை தேடிப் போக முடியல்லயே… என் குடிசையில் நெடுநாள் அடுப்பு எரியல்லயே… எரியாத அடுப்பு கண்டு என் நெஞ்சு எரிகிறதே அழுகின்ற பிள்ளைக்கு ஆகாரம் தேடி யலைகிறதே… பட்டினி கிடந்த வயிறெல்லாம் பசியில் கொதிக்குதே தட்டினில் உணவில்லா நிலை கண்டு கண்ணீரும் வழியுதே… பிள்ளை பசி தீர்க்க முடியா துன்பம் தந்தையொருவரின் உயிரைப் பறித்ததே… ஏழ்மையின் வாசலில் வெறுமை மிகக் கொடுமையானதே… தண்ணீர்க் குவளையில் கண்ணீர் துளிகள் சேருதே… மிடிமையின் பிடியில் உடைமை பசியென்றானதே… பசியும் பட்டினியும் […]

Read More

யுத்த சத்தம்

உக்ரைன் மண்மீது அக்கிரமம் நடக்கிறது வக்கிரம் நிறைந்த தலைமைகளால் தீக்கிரையாகின்றது உயிரெல்லாம் குருதிப் பெருவெள்ளம் அருந்திப் பார்த்திட ஆசையோ வருந்தியழுவீர் ஒரு நாள் திருந்திட முனைவீரே அதற்கு முன்னால் அமைதி குலைப்பதில் அப்படியென்ன திருப்தி சமாதிகள் பெருக்கி மகிழ்வதற்கா உயர் பதவி புட்டினின் நோக்கமெல்லாம் பட்டினிச் சாவா விட்டினிப் போய்விடு பொல்லாத போரே சுடுகாட்டினைப் போல் மாற்றாதே ஒரு நாட்டை உயிரெல்லாம் மடிந்து உருக்குலைந்து சிதைந்து குண்டடிபட்டு நிம்மதி கெட்டு கட்டிடமெல்லாம் இடிபட்டுடைந்து அழிந்து போக விடலாமோ […]

Read More

பெண்மையைப் போற்றுவோம்

உலகிலே மான்பு மிக்க மனித இனம் பெண் தான் மாற்றும் மிக்க பெண்கள். மாறும் இந்த உலகிலே இதுவரை மாறாத ஒரே ஒரு இறைவனின் படைப்பு பெண் மாறாக் கல்நெஞ்சங்களையும் மாற்றத்தக்க மனதாக மாற்றுவது பெண் மாற்றுமையின் உச்சம் பெண் மாசில்லா இறைப் பிரதிநிதி பெண் உயிரை உலகிற்கு தரிவிக்கும் உத்தம படைப்பு பெண் கருவை சிசுவாய்ப் பிரசிப்பவள் பெண். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே போராடி இறைவனின் படைப்பான – தன் குழந்தையை உலகைக் காணச் செய்வாள் […]

Read More

பட்டாம் பூச்சி

Binth Ameen SEUSL 2015/16 Batch FAC பாடசாலைக் கல்வியை பற்றிப்பிடித்ததெல்லாம் பல்கலைக்கு அடியெடுத்து பசுமைநாட்களை பெற்றுக் கொண்டாடவே கனவின் மயக்கமோ என கிள்ளிப்பார்க்கத்தோணுமளவு கற்ற கல்விக்காய் கலைப்பீட பட்டமளிப்புவிழா கலையக அங்னியிலே கச்சிதமாய் அரங்கேறியது காத்திருப்பு கைகூட கனாக்களும் நிறைவேற கொண்டாட்டம்தான் எங்களுக்கு கல்விக்கு முடிசூட்டிய நாள் நமதே உபகுலபதியாய் ரமீஸ் சேர் இதைத்தாண்டி வேறென்ன இன்பம் எமக்கு உற்சாகம் எம்மில் ஊற அவர்கையால் பட்டங்களை அன்பூறப்பெற்றோம் புதுமணப்பெண் உட்பட புதுயுகக்கண்கள் பட்டம் பெற வரிசையாய் […]

Read More

எழுத்துக்களுடன் என் பேச்சு

குனிந்த படியே புத்தகமொன்றை மடியில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். பிடரியில் சிறு வலியொன்று உண்டானது. பிடரியை தடவிய படியே மெதுவாய் என் நாற்காலியில் சாய்ந்து கொண்டேன். என்னை அறியாமல் ஒரு அசந்த தூக்கம் சில நேரங்களில் பின்னர் ஒரு அறியப்படாத குரல் இலேசாக என் செவிகளை எட்டியது. ஏ மனிதா! என்னைப் பார் என்றது. சுற்றும் முற்றும் திரும்பினேன் யாரும் இல்லை மீண்டும் அதே குரல் அங்கே ஏன் பார்க்கிறாய் சற்று கீழே குனிந்து பார் என்றது. […]

Read More

இளம்கீறல்

ஆயிரம் ஆட்டம் போட்டாலும் அன்புக்கு அவள் அடிமைதான் என்னைப் பொருத்தமட்டில் இளம் கீறலாய் இருக்கும் அவளை இழுத்து சீண்டிப்பார்த்தால் இழப்பு உனக்குத்தானே ஒழிய அவளுக்கல்ல அர்த்தங்கள் புரிகிறதா? அழகு நிலாவைத் தாண்டி அமாவாசையிலும் கூட ஒளியூட்ட அவளால் முடியுமென்பேன் எல்லாமே அறிந்தபோதும் அவளுக்கானவர்களிடம் அடக்கமாய் இருந்து அவர்களை உயர்த்திப்பார்த்து ஊமையாயேனும் சந்தோஷப்படுத்தி அழகிய வாழ்வை அர்த்தப்படுத்துவாள். ஏனெனில் அவள் உலகமோ அடுத்தவர் உலகம் அவர்களே இவளுக்கு சொர்க்கம் அவளுக்கு அன்பு காட்டுவதை ஒருபோதும் நிறுத்துவிடாதீர்கள் பின்த்அமீன் மாவனல்லை

Read More

எங்கள் புது வருடம்

வருடமொன்று பிறப்பதனால் வாழ்க்கை இங்கு மாறிடுமோ ஒவ்வொரு விடியலும் புதுப் பிறப்பே அதை உணர்ந்து நடந்தால் வரும் சிறப்பே ஒவ்வொரு நொடியும் உனக்கானதே அதில் மனதினை பண்படுத்தல் நலமாகும் ஒவ்வொரு நபரும் தனிவகையே அவரிடம் நல்லன காணல் நற் பண்பாகுமே வருடமொன்று பிறந்ததென்று வாழ்வில் இன்று வசந்தங்கள் வருவதில்லை வாழும் நொடி புனிதம் என்று வாழ்க்கை யொரு வரம் என்று உணர் பொழுது உதிக்கும் வரை வருடமொன்று பிறந்ததென்று வாழ்க்கையிங்கு மாறுவதில்லை மக்கொனையூராள்

Read More